டென்மார்க் கற்பக விநாயகர் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.

333 0

டென்மார்க் Naestved நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் நேற்று 11.05.2024சனிக்கிழமை மாலை 16.00 மணிக்கு முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய தமிழின அழிப்பின் மூலம், தங்கள் இன்னுயிர்களை ஈர்ந்த மக்களுக்கும் மாவீரர்களுக்குமான சிறப்பு நினைவேந்தல் வழிபாடு பொதுமக்களால் உணர்வுடன் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பொதுமக்கள் தங்கள் கைகளில் நெய்விளக்கேந்தி நெஞ்சினில் மரணித்தவர்களின் நினைவை உணர்வுடன் சுமந்து தரிசித்தனர்.