மூதூர் சம்பூர் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வில் பொலிசாரின் அடாவடித்தனம்.

66 0

திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சம்பூர் கிராமத்தில் 12/05/2024 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட உபசெயலாளர் ஹரிஹர குமார் கரன் அவர்களுடைய தலைமையில் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது அதன் போது மூதூர் பிரதேச போலீஸ் பொறுப்பதிகாரி அச்சுறுத்தல் விடுத்ததோடு முள்ளிவாய்க்கால் கஞ்சி காட்டிய கோயில் வளாகத்துக்குள் உள் நுழைந்து நிகழ்வை தடுப்பதற்கு முயற்சி செய்திருந்தனர்

இந்நிலையில் மாலை வேலை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உப செயலாளர் ஹரிஹரகுமார் உட்பட நிகழ்வில் கலந்து கொண்ட இரு பெண்களும் ஒரு பெண்ணினுடைய மகள் பாடசாலை மாணவி உட்பட நான்கு பேர் மூதூர் போலீசாரால் இரவு வேளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.