வெருகல் – ஈச்சிலம்பற்று ஶ்ரீ செண்பகநாச்சியம்மன் ஆலயத்தில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டார் எஸ்.சிறிதரன்

35 0

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வெருகல் – ஈச்சிலம்பற்று  ஶ்ரீ செண்பகநாச்சியம்மன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) பகல் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டார்.

முதலில் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் சண்முகம் குகதாஸன் அவர்களின் அழைப்பின் பேரில் குறித்த மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பில் வெருகல் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சுந்தரலிங்கம், உதவி தவிசாளர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெருகல் பிரதேச முக்கியஷ்தர்கள், ஆலய நிருவாகத்தினர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.