பால் போத்தலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள், ரவைகளுடன் ஒருவர் கைது!

32 0

வெலிப்பன்ன, நாவுட்டுடுவ பகுதியில்  வீடொன்றில் குழந்தைகளுக்கு பாலூட்டும் பால் போத்தலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைக்குண்டுகள் மற்றும் ரவைகளுடன்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிப்பன்ன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் மாகாண புலனாய்வு அதிகாரிக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

கைது செய்யப்பட்ட நபர் சுற்றுலா வர்த்தகத்தில் ஈடுபடும் சாரதி  என்பதுடன்  இவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கைக்குண்டுகள்,  ரவைகள் , என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.