சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவி விபத்தில் சிக்கி படுகாயம்

30 0

பலாங்கொடை வெலிகேபொல வீதியில் இடம்பெற்ற விபத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிவிட்டு வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த மாணவியொருவர் படுகாயமடைந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

பலாங்கொடை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று எதிர்த் திசையில் பயணித்த இரும்புக் கம்பிகளை ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது லொறியில் இருந்த சில இரும்புக் கம்பிகள் பஸ்ஸிற்குள் வீசப்பட்டுள்ள நிலையில் குறித்த பஸ்ஸிற்குள் இருந்த மாணவி ஒருவரின் கழுத்து மற்றும் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து காயமடைந்த மாணவி பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியின் சாரதியின் கவனக்குறைவே இந்த விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து பஸ் மற்றும் லொறியின் சாரதிகள் பலாங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.