அனுமதி இல்லாமல் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்

41 0

பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆக்கரத்தன்ன பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அலுத்கெதர, பெல்காத்தன்ன மற்றும் பல்லேகம பதியத்தலாவ பகுதியை சேர்ந்த 32, மற்றும் 44 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் வழக்கு தொடரவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.