பக்தாத்தில் தற்கொலை தாக்குதல் – 20க்கும் அதிகமானவர்கள் பலி

391 0

syriyaஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகளினால் ஈராக் தலைநகர் பக்தாத்;தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 20க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 35க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பக்தாத் நகரில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கதிமியாஹ் பிரதேசத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பு படையினரை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 3 ஆம் திகதி பக்தாத்தின் கரடா பிரதேசத்தில் நடத்தப்பட்ட தாக்குதலின் போது 281 பேர் பலியாகினர்.
இதன்போது பாதுகாப்பு தரப்பினருடன் பெரும்பாலான பொது மக்கள் கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.