பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த 3 பேர் கைது!

49 0

பாதாள உலக செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட 20 குழுவினரால் நாடளாவிய ரீதியில் நேற்று (8) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்,இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பாதாள உலக குழுக்களுடன் தொடர்புகளை பேணியதாக கூறப்படும் மேலும் 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ரிகில்லகஸ்கட பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கொழும்மு 12 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 29 மற்றும் 43 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் இதுவரை பாதாள உலக குற்றக் குழுக்களைச் சேர்ந்த 927 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.