க.பொ.த சாதாரணத்தர பரீட்சைக்குத் தோன்றிய மாணவன் மீது தாக்குதல் ; இருவர் கைது!

53 0

க.பொ.த சாதாரணத்தர பரீட்சை நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த மாணவர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் இருவர் ரத்கம பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் ரத்கம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் ரத்கம பிரதேசத்தைச் சேர்ந்த 17 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்களாவர்.

ரத்கம, தெவினிகொட பிரதேசத்தைச் சேர்ந்த மாணவரொருவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

இவர் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த போதிலும் தொடர்ந்து பரீட்சை எழுதியதாக ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.