நான்கு கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் கரைசலுடன் கட்டுநாயக்கவில் வர்த்தகர் கைது

39 0

நான்கு கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் கரைசலுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் ஒருவர் இன்று (9) கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்முனை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய வர்த்தகரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் துபாயிலிருந்து இன்று (9) காலை 08.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரிடமிருந்து 01 கிலோ 975 கிராம் நிறையுடைய தங்க ஜெல் கரைசல் அடங்கிய 3 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டு  மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.