மூதூரில் சுகாதார நிலையம் திறந்து வைப்பு

74 0

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெரிய பாலம் பகுதியில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட  கிராமிய சுகாதார நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வானது இன்று வியாழக்கிழமை (09)இடம் பெற்றதுடன் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இப் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஹில்மி முகைதீன் பாவா தலைமையில் இடம் பெற்ற இவ் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அதுகோரள உட்பட மாகாண சுகாதார பணிப்பாளர் டொக்டர் டி ஜி.எம்.கொஸ்தா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.