இலங்கையின் நீர்பாசனத் திட்டங்களுக்கு குவைட் கடனுதவி

254 0

இலங்கையின் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்பாசனத் திட்டங்களுக்கு குவைட் கடனுதவி வழங்கியுள்ளது.

இதற்கமைய 16.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைட்டின் மெல்லிய கடன் திட்டத்தின் அடிப்படையில் குறித்த கடன் தொகையானது இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்ட இந்த கடனானது இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய திட்டமான களுகங்கை திட்டத்திற்கு செலவு செய்யப்படவுள்ளது.

இந்த கடன் தொகையானது 1.5 வீதம் வட்டியுடன் 22 வருடங்களுக்கு இலங்கைக்கு கிடைத்துள்ளதாக நிதியமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.