கிளிநொச்சியில் பலத்த காற்று – வீடுகள் பல சேதம்

385 0

கிளிநொச்சியில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன.

பொன்னகர், பாரதிபுரம், செல்வபுரம் ஆகிய கிராமங்களில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன.
அத்துடன் பயன்தரும் மரங்களும் முறிந்துள்ளன.

திடீரென மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியமையால் குறித்த பாதிப்புக்கு மக்கள் ஆளாகியமை குறிப்பிடதக்கதாகும்.