ஜி.எஸ்.பி வரிச்சலுகை வழங்குவது குறித்து ஆராய ஐரோப்பிய ஒன்றியக் குழு சிறிலங்கா வருகை!

425 0

ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை சிறிலங்காவுக்கு வழங்குவது குறித்து ஆராய ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று சிறிலங்காவுக்கு வருகை தந்துள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் 19ஆம் நாள் பிரசல்சில் நடைபெறவுள்ளநிலையில் குறித்த குழுவானது சிறிலங்காவுக்கு வருகை தந்துள்ளது.

இக்குழு, நாட்டின் அரசியல் நிலமைகள் தொடர்பாகவும், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் சட்டங்கள் தொடர்பாகவும் ஆராயவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஏற்கனவே சில குழுக்கள் சிறிலங்காவுக்கு வருகை தந்து ஆய்வு நடத்தியதையடுத்து தற்போது இக்குழுவினர் வருகை தந்துள்ளனர்.

ஏற்கனவே வருகை தந்த குழுவினரின் பரிந்துரைக்கமைய சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.