வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் கட்சியை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது

281 0

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் கட்சியை 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என என் தேசம் என் உரிமை கட்சியின் சார்பில் ராஜேஷ் லக்கானியிடம் மனுகொடுக்கப்பட்டது.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம், என் தேசம் என் உரிமை கட்சியின் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பல்வேறு கட்சியினரும் வழங்கினர். 61 பறக்கும் படையை தேர்தல் கமிஷன் அமைத்தாலும் அதை கட்டுப்படுத்த முடியவில்லை.

பெரிய கட்சிகளின் சார்பில் வேட்பாளராக நின்றவர்களிடம் உண்மையைக் கண்டறியும் சோதனை நடத்த வேண்டும். அதில் யாராவது குற்றம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அந்தக் கட்சி 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது.

அடுத்த தேர்தலின்போது, பெரிய கட்சி வேட்பாளர்களுடன் மத்திய போலீஸ் மற்றும் தேர்தல் கமிஷன் அதிகாரிகளை அனுப்பவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.