கால்வாய்யொன்றில் இரத்தினக்கல் படிவுகள் கண்டுபிடிப்பு!

265 0

பொகவந்தலாவை கர்கஸ்வோல் தோட்டத்தின் வெட்டப்பட்ட கால்வாய் ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இரத்தினக்கல் படிவுகள் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மழை காலங்களில் கால்வாய் நிரம்பி வழிவதால், இதனால் அருகில் இருக்கும் தோட்டங்கள் நீரில் மூழ்கும் காரணத்தால் அம்பகமுவ பிரதேச சபை ஊடாக இந்த கால்வாய் வெட்டப்பட்டுள்ளது.

இதன் போது , கண்டுபிடிக்கப்பட்ட இரத்தினக்கல் படிவுகளை கடத்தல் காரர்கள் சிலர் கொண்டு செல்ல முயற்சிப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய காவற்துறையினர் தலையிட்டு அவற்றை இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த படிவுகள் இன்று பொகவந்தலாவையில் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.