ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் கட்சியை ஏலம் விடுவதாக மஹிந்த அமரவீர தெரிவிப்பு

45 0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் கட்சியை ஏலம் விடுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், விவசாய அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர்  தனது பாதுகாப்பு, வழக்கு மற்றும் நிதித் தேவைகளுக்காக இந்தக் கட்சியை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று  திங்கட்கிழமை (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மைத்திரிபால சிறிசேனவுக்கு  கட்சியின் நிறைவேற்று சபையில் இணையும் தகுதி  இல்லாத காரணத்தினாலும், பதில் செயலாளர்  சட்ட நடவடிக்கைகளை  அவமதித்துள்ளமையினால் இது குறித்து எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக  தெரிவித்துள்ளார்.