வித்தியாவின் தாயருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த உசாந்தனின் தாய் தொடர்ந்தும் விளக்கமறியலில்

368 0

93373_sdasdasdsaபுங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இக் கொலை வழக்கின் சந்தேக நபர்களில் ஒருவரான உசாந்தனின் தாயை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு இன்று திங்கட்கிழமை மீண்டும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதன் போது சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணி இ.சபேசன் மன்றில் தோன்றிய இவ்வழக்கில் விளக்மறியலில் வைக்கப்பட்டிருந்த சுவிஸ்குமாரின் தாயர் சுகயீனம் காரணமாக உயிரிளந்துள்ளார்.

இந்நிலையில் உசாந்தனின் தாயும் தொடர்ந்தும் சிகிச்சை பெறவேண்டியுள்ளது. எனவே தொடர்ந்தும் அவருக்கான சிகிச்சையினை பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை செய்து தருமாறு மன்றில் கோரியிருந்தார்.இதற்கான அனுமதியினை வழங்கிய நீதவான் சந்கேத நபரை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதிவரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.