சிறுநீரக பிரச்சினையை தீர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் – சுகாதார அமைச்சர்

272 0

சிறுநீரக பிரச்சினையை தீர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அறிவித்துள்ளார்.

வட மத்திய மாகாணத்தில் உள்ள கெப்பித்திகொல்லாவவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக சிறுநீரக பிரச்சினையால் பாதிப்படைந்த வீடுகளுக்கு ஆயிரம் கையடக்க கூழ்மப்பிரிவு இயந்திரங்களை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, முதல் தொகுதியாக இந்த ஆண்டில் 300 கூழ்மப்பிரிவு இயந்திரங்கள் வழங்கப்படும்.

இந்திய முதலீட்டின் கீழ் 900 கூழ்மப்பிரிவு இயந்திரங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.