தற்போதைய அரசாங்கம் சட்டத்தையும் ஒழுங்கையும் நியாயமான முறையில் நடைமுறைப்படுத்துவதில்லை என மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
ராஜகிரியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி குறித்து ஐக்கிய மக்கள் மஹிந்த அமரவீர, கையூட்டல் ஒழிப்புப் பிரிவில் முறைப்பாடு செய்தார்.
விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.
ஆனால், அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக குறிப்பிட்ட விமல் வீரவன்ச 87 நாட்களாக பிணையின்றி சிலை வைக்கபபட்டார்.
இவ்வாறான நிலையில், நீதி எவ்வாறு நிலைநாட்டப்படும் என பந்துல குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.