மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை மூட முடியாது – உயர்கல்வி அமைச்சர்

278 0

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை மூட வேண்டும் என விடுக்கப்படும் கோரிக்கைகை நிறைவேற்ற முடியாது என உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மருத்துவக் கல்வியின் பொறுப்பு பல்கலைக்கழகங்களுக்கும், மருத்துவ சபைக்குமே உள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துக்கு அரசியல் ரீதியான ஒழுங்குப் பத்திரமே காணப்படுகிறது.

கடந்த தேர்தலில் நல்லாட்சி அரசை நிறுவ மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் செயற்பட்டது.

இவ்வாறான நிலையில், மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

அதை மூட முயற்சித்தால், நீதிமன்றத்தை அவமதித்த காணரத்தினால் நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டிய நிலை தமக்கு ஏற்படுவதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.