நாடலாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு – கிராம சேவகர்கள் தீர்மானம்

277 0

நாடலாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள கிராம சேவகர்கள் தீர்மானித்துள்ளனர்.

தமது இடமாற்றம் தொடர்பாக இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறையை மாற்றுவதற்கு உள்நாட்டு அலுவலகள் அமைச்சு தீர்மானித்துள்ளமைக்கு எதி;ர்ப்பு தெரிவித்தே கிராம சேவகர்கள் இந்தப் பணிப் புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த தீர்மானத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

எனினும், குறித்த தீர்மானத்தை முழுமையாக கைவிட வேண்டும் என இலங்கை ஒன்றிணைந்த கிராம சேவகர்கள் சங்கத்தின் தலைவர் சீ.பி. வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.