புனர்வாழ்வு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் 25 வருடகால அரசியல் வாழ்வை சித்தரிக்கும் ‘கிழக்கு வாசல்’ நூல் வெளியீட்டு விழா, காத்ததன்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சபாநாயகர் கரு ஜெயசூரிய கலந்து கொண்டதுடன், அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள் இராணுவ அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.