மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில்… (காணொளி)

308 0

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் சத்தியாக்கிரக போராட்டம் இன்று 49ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

நாளை குறித்த போராட்டம் 50ஆவது தினத்தை பூர்த்திசெய்யவுள்ள நிலையில், போராட்டம் நடைபெறும் பகுதிக்கு வருகைதந்த பிரித்தானிய பெண் ஒருவர், குறித்த போராட்டம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அதில் கலந்து கொண்டார்.

நாளை தமக்கான நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.

குறித்த பிரித்தானிய பிரஜைக்கு இருக்கும் அக்கறை கூட இந்த நாட்டின் அரசியல்வாதிகளுக்கு இல்லாமல்போய்விட்டதாக பட்டதாரிகள் இதன்போது கவலை தெரிவிக்கின்றனர்.