கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் இன்று 50ஆவது நாளாகவும்… (காணொளி)

290 0

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுவரும்  கவனயீர்ப்புப் போரட்டம் இன்று 50ஆவது நாளாகவும் தொடர்கிறது.

கடந்த எட்டு வருடங்களிற்கு  மேலாக தங்களுடைய உறவுகள் தொடர்பில் உரிய பதிலை இந்த அரசு வழங்க வேண்டும் என கோரி, காணாமல் போனோரின் உறவினர்கள் பல்வேறு போரட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கமைய கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னால் இன்று 50ஆவது நாளாக காணாமல் போனோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.