6 நாள்கள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த 8 வயது சிறுமி மரணம்

235 0

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வாழைச்சேனை ஹைராத் குறுக்கு வீதியில் 6 நாள்கள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி ஒருவர் உயிரிழந்த பரிதாக சம்பவம் இன்று மாலை இடம் பெற்றுள்ளது.

வாழைச்சேனை ஹைராத் குறுக்கு வீதியில் வசிக்கும் கலந்தர் பாவா பாத்திமா ஷிபா (வயது – 08) என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை அவர் உயிரிழந்தார்.

இச் சிறுமி டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக வைத்தியசாலையின் மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

மரணமடைந்த வாழைச்சேனை ஹைராத் குறுக்கு வீதியில் வசிக்கும் குறித்த சிறுமி வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் தரம் 03ல் கல்வி பயிலும் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.