மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

291 0

பதுளை , கந்தகெடிய – தெமொதர பிரதேசத்தில் அனுமதி பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேர் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.

இதன் போது , கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிபர் ரக வாகனமும் மற்றும் உழவு இயந்திரங்கள் இரண்டும் காவற்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர் குறித்த பிரதேசத்தை சேர்ந்தவர் என காவற்துறை தெரிவித்துள்ளது.