முச்சக்கர வண்டியொன்றின் மீது தீ வைப்பு

217 0

அநுராதபுரம் – தலாவ – கட்டுகேலியாவ பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர்.
அதன் உரிமையாளர், முச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு, அருகில் அவருக்கு சொந்தமான காணிக்கு சென்றிருந்த போதே இந்த தீ வைப்பு இடம்பெற்றுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் தலாவ காவற்துறை விசாரணையை ஆரம்பித்த நிலையில், முச்சக்கர வண்டிக்கு அருகில் இருந்து காலணி ஜோடி ஒன்றும் கத்தியொன்றும் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு முச்சக்கர வண்டி மீது தீ வைத்தவர்களை கைது செய்வதற்காக தலாவ காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.