சுதந்திர கூட்டமைப்பு நிதிபற்றாக்குறையில்

320 0

எதிர்வரும் காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் அரசியல் வாதிகளுக்கு அன்றி, கட்சிக்கே நிதியுதவி அளிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

அங்குணுகொல பெலச பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டார்.

கட்சி மிகவும் நிதி நெருக்கடியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.