“பண்டாரவளை ‘பூதயா’ போதைப்பொருளுடன் கைது!

31 0

“பண்டாரவளை பூதயா ”  என்றழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று (1) தியத்தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபராவார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 5,100 கிராம்  ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர் பண்டாரவளை பொருளாதார மத்திய நிலையத்தில் சிகையலங்கார நிலையம் ஒன்றை இயங்கிச் செல்லும் போர்வையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர் பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் அறையொன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் பண்டாரவளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 7 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.