கட்டுநாயக்கவில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

36 0

கட்டுநாயக்க பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 7 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, அதே பிரதேசத்தில் வைத்து 550 போதை மாத்திரைகளுடன் மற்றுமொரு நபர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் கட்டுநாயக்க மற்றும் சீதுவை உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 19 மற்றும் 42 வயதுடைய இருவராவார்.

மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.