ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, இலங்கையில் உண்மையான சமாதானத்தை கொண்டு வருவதற்காக முன்வைத்த யோசனைகளை நிறைவேற்றுவதற்காக கனடா, தொடர்ந்தும் இலங்கைக்கு ஊக்கமளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ருடீயு (Justin Trudeau) இதனை தெரிவித்துள்ளார்.
1983ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை நினைவுப்படுத்தும் வகையில் உலகளாவிய ரீதியாக அனுஸ்டிக்கப்படும்; கறுப்பு ஜூலை நிகழ்வுகளில் கனடாவும் பங்கேற்பதாக கனேடிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இலங்கையின் போரில் உயிர்நீத்த இலங்கையர்கள் அனைவருக்கும், தமிழர் எதிர்ப்பு நடவடிக்கையின்போது உயிர்நீத்த அனைவரின் குடும்பங்களுக்கும் தமது ஆழ்ந்த துக்கங்களை பகிர்ந்துக்கொள்வதாக கனேடிய பிரதமர் கூறியுள்ளார்.
போரினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு பிரிவினை களையப்பட்டு ஒற்றுமை மேம்படுத்தப்படவேண்டும்.
இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை,இலங்கையில் உண்மையான சமாதானம், நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை கருத்திற்கொண்டு நிறைவேற்றியுள்ள யோசனையை முன்னெடுத்துச்செல்ல கனடா, இலங்கைக்கு ஊக்கமளிக்கும் என்றும் கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
- Home
- புலம்பெயர் தேசங்களில்
- கனடா, இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு
ஆசிரியர் தலையங்கம்
-
தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்!
July 5, 2024 -
உலகிலேயே மிகச்சிறந்த தானம் இரத்த தானம்!
June 14, 2024 -
‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்
April 23, 2024
தமிழர் வரலாறு
-
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் முதலாம் நாள்
September 15, 2024 -
லெப்.கேணல் மல்லி
November 20, 2023
கட்டுரைகள்
-
தமிழ்ப் பொது வேட்பாளர் வித்தியாசமானவர்!
September 15, 2024 -
பெண் வேட்பாளர்களே இல்லாத ஜனாதிபதி தேர்தல் ….!
August 20, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழர் வரலாற்றுக் கண்காட்சி நெதர்லாந்து.
July 27, 2024