ஜேர்மன் தாக்குதல் – தாக்குதல்தாரி ஒரு வருடம் திட்டம் தீட்டினார்.

551 0

german005ஜேர்மனியில் கடந்த வாரம், 9 பேரை சுட்டுக்கொன்ற 18 வயது இளைஞர் தமது தாக்குதலை கடந்த ஒருவருடமாக திட்டமிட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனிய அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
எனினும் அவருக்கு எவ்வாறு துப்பாக்கி கிடைத்தது என்பது தொடர்பில் இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
இந்தநிலையில் கொல்லப்பட்டவர்களில் 7பேர் இளவயதினர், இதில் இரண்டு துருக்கியர்கள், இரண்டு ஜெர்மனியர்கள், ஒருவர் என்ற அடிப்படையில் ஹங்கேரி, கிரிஸ் மற்றும் கொசோவோ நாடுகளில் உள்ளவர்களும் அடங்கியுள்ளனர்
துப்பாக்கிதாரி தமது  வகுப்பு நண்பர்களை மாத்திரம் குறிவைத்து தாக்கவில்லை. தம்மை பாடசாலை காலத்தில் துன்புறுத்திய  மூன்று இளைஞர்களும் அடங்கியிருந்தனர்.