பெண் பொலிஸ் உத்தியோகத்தர் லொறியில் மோதி உயிரிழப்பு!

31 0

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் லொறியால்  மோதப்பட்டு நேற்று (20) உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் களுத்துறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில்  கடமையாற்றும் தொடங்கொடை பிரதேசத்தை சேர்ந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தராவார்.

இவர் தனது கடமைகளை முடித்துவிட்டு பஸ்ஸில் பயணித்துள்ள நிலையில் மாலபே பிரதேசத்தில் வைத்து பஸ்ஸிலிருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்ட போது மத்துகமவிலிருந்து களுத்துறை நோக்கி பயணித்த லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.