அரசியல் வாழ்க்கையில் சரியாக செயற்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன்

53 0

அரசியல் வாழ்க்கையில் சரியாக செயற்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தடைகளை வெல்லும் தமிழ்த் தேசியம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய எழுச்சி நாள் நிகழ்வு நேற்று (25.02.2024) இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நான் அரசியல் வாதியாக இருந்ததைவிட ஆன்மீக வாதியாக தான் செயற்பட்டிருக்கின்றேன். தற்போதும் ஊடகங்களில் ஆன்மீக ரீதியில் விமர்சிக்கப்படுகின்றேன்.

ஆனாலும் அரசியல் வாழ்க்கையில் சரியாக செயற்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.