மட்டு- புகையிரத்துடன் மோதி இளைஞன் உயிரிழப்பு

54 0

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பகுதியில் புகையிரதத்துடன்  மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம்  ஞாயிற்றுக்கிழமை (25)  இரவு 11 மணியவில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கருவப்பங்கேணியைச் சேர்ந்த 25 வயதுடைய ஆகாஸ் என்றழைக்கப்படும் அசோக்குமார் சனுஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பை நோக்கி  ஞாயிற்றுக்கிழமை (25)  இரவு பயணித்த இன்டசிற்றி புகையிரதத்தில் கருவப்பங்கேணி பகுதி தண்டவாளத்தில் வைத்து புகையிரத்தில் குறித்த இளைஞன் மோதியதையடுத்து சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சடலத்தை பொலிசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்தனர் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் முன்னெடுத்துவருகின்றனர்.