கலைஞரின் இறுதிப் போராட்டத்தின் அடையாளம்தான் இந்த நினைவிடம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

51 0

சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தையும், பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நினைவிடத்தில் ‘கலைஞர் உலகம்’ என்ற பெயரில் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-கலைஞர் என்றாலே போராட்டம்தான். அவரது இறுதிப் போராட்டத்தின் அடையாளம்தான் இந்த நினைவிடம்!இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்