சாரதி அனுமதிப்பத்திரத்தை மாற்ற 30 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற இருவர் கைது

68 0

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நுவரெலியா மாவட்ட வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முகாமையாளர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் இன்று செவ்வாய்க்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பஸ் உரிமையாளர் ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை மாற்றுவதற்கு 30 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.