பதில் பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் 29ஆம் திகதியுடன் நிறைவடைகிறது!

53 0

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பதவிக்காலம் இம்மாதம் 29ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. அவர் மூன்று மாத காலத்துக்கு பதில் பொலிஸ் மா அதிபராக  நியமிக்கப்பட்டார்.

கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டது.

ஆனால், இந்த நியமனம் தொடர்பாக அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.

இருப்பினும். தேசபந்து தென்னகோன் நவம்பர் 30 ஆம் திகதி தனது பதவியை ஏற்றுக்கொண்டார்.