இருதரப்பு மோதலில் இரு பொலிஸார் உட்பட நால்வர் காயம் : பாணந்துறையில் சம்பவம்!

32 0

இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிளை சோதனையிட்டபோது,  ஏற்பட்ட இரு தரப்பு மோதலையடுத்து காயமடைந்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக   பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை பிரதேச போக்குவரத்து உத்தியோகத்தர்கள் இருவர் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த பாணந்துறை பிரதேசத்தில் வசிக்கும் இருவருமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை வலான பாலத்துக்கு அருகில் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் நள்ளிரவு 12.10 மணியளவில் மொரட்டுவையிலிருந்து பாணந்துறை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளிளை நிறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இரு பொலிஸாரும் குறித்த மோட்டார் சைக்கிளை சோதனையிட்டபோதே இரு தரப்பினருக்குமிடையில் வாக்குவாதம் முற்றி மோதலில் முடிந்துள்ளதாக தெரிய வருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.