துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பதவி உயர்வு!

42 0

சந்தேக நபர் ஒருவரை கைது செய்யச் சென்ற போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபர் திரு தேஷ்பந்து தென்னகோன் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டேபொல பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய சென்ற போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அதிகாரி நேற்று (11) உயிரிழந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை காலை, மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்யச் சென்ற போது ஏற்பட்ட மோதல் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியைப் பறிக்க முயற்சித்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தினால் பொலிஸ் உத்தியோகத்தர் சுடப்பட்டதாகவும், சந்தேக நபர் உத்தியோகபூர்வ துப்பாக்கியுடன் தப்பிச் சென்றதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளதுடன், அவர் மேல் லுனுகம பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடையவராவார்.