வாடகைக்கு பெற்றுக்கொண்ட காரை பாகங்களாக பிரித்து விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது

45 0

வாடகைக்கு பெற்றுக்கொண்ட காரை பல பாகங்களாக பிரித்து விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் எஸ்வெல்ல மற்றும் நெலும்தெனிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 38 வயதுடையவர்களாவர்.

கம்பஹா குற்றப் புலனாய்வு பிரிவினர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காரானது அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள வாகன வாடகை சேவை நிலையம் ஒன்றில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது என விசாரணையில் தெரியவந்துள்ளது.