வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட காரை விற்பனை செய்ய முற்பட்ட இருவர் நிட்டம்புவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்ட காரை உதிரி பாகங்களுக்காக விற்பனை செய்ய முற்பட்ட போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனுராதபுரத்தில் இருந்து வாடகை அடிப்படையில் குறித்த கார் பெறப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எஸ்வெல்ல மற்றும் நெலும்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.