யாழ். அம்பனில் சட்டவிரோத மணல் அகழ்வை நிறுத்துமாறு கோரி மக்கள் போராட்டம்

36 0

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நீண்ட காலமாக இடம்பெற்று வரும் சட்ட விரோத மணல் அகழ்வை நிறுத்துமாறு கோரி சற்று முன்னர் பொதுமக்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இன்று (9) காலை 9 மணியளவில் அம்பன் பிரதேச வைத்தியசாலை முன் ஆரம்பமான இந்த போராட்டப் பேரணி மணல் அகழ்வு இடம்பெறும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இதில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டு மணல் அகழ்வை நிறுத்துமாறு கோஷமிட்டு வருகின்றனர்.

2010ஆம் ஆண்டிலிருந்து இதுவரை சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பில் சட்டத்துக்கு முரணாக மணல் அகழ்ந்தெடுக்கப்பட்டு வருகிறது.