புலமைப்பரிசில் பரீட்சை திகதியை மாற்றுங்கள்- வீணாகானகுரூபீடம் கோரிக்கை

274 0
2017 ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலய தேர் உற்சவத்திலன்று நடைபெற திகதியிடப்பட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ள வீணாகானகுருபீடம் அத்திகதியை மாற்றியமைக்குமாறும் கோரிக்கை விடுத்திள்ளது.
வீணாகான குருபீடத்தின் குருமுதல்வர் சபா வாசுதேவ குருக்கள் குறிப்பிடுகையில்.குறிப்பாக வடக்கில் இந்துக்களின் பொக்கிசமாக திகழும் நல்லூர் கந்தன் ஆலய மகோட்சவத்தின் தேர் உற்சவத்தன்று இம்முறை புலமைப்பரிசில் பரீட்சை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது இலங்கையில் மட்டுமல்ல உவகத்தில் உள்ள இந்துக்கள் கூட கலந்து கொள்ளும். நல்லூர் தேர் உற்சவத்தன்று புலமைப்பரிசில் பரீட்சையை நடாத்துவது பொருத்தமான தல்ல எனவே அரசாங்கம் உரிய கரிசனை செலுத்தி இவ்விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வீணாகான குருபீடத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.