ஒட்டாவா பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டும் – பிரித்தானிய அரசாங்கம்

264 0
ஒட்டாவா பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டும் என்று பிரித்தானிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் உள்ள பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் லோரா டேவிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடக்கு பகுதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கான வேலைத்திட்டத்துக்கு பிரித்தானியா 2010ஆம் ஆண்டு முதல் நிதி வழங்கி வருகிறது.
2019ம் ஆண்டு வரையான இந்த வேலைத்திட்டத்துக்கு 1.2 பில்லியன் ரூபாய்களை பிரித்தானிய செலவிடவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் அதிக நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிறந்த உற்பத்தி வளங்களைக் கொண்ட வாழ்வாதார பூமியாக காணப்படுகின்றன.
இந்த நிலையில் அங்கு நிலக்கண்ணி வெடிகளை அகற்றி, மக்களின் இயல்பு வாழ்வை மீளளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.