மீனவர்களின் நலனுக்காக பாடுபடும் என்னை தேர்வு செய்யுங்கள்: சுயேச்சை வேட்பாளர் அசோக் சக்கரவர்த்தி

253 0

மீனவ மக்களின் நலனுக்காக பாடுபடும் என்னை தேர்வு செய்யுங்கள் என்று சுயேச்சை வேட்பாளர் டாக்டர் ஏ.எஸ். அசோக் சக்கரவர்த்தி பிரசாரம் செய்தார்.

சினிமா தயாரிப்பாளரும் தொழில் அதிபருமான டாக்டர் ஏ.எஸ். அசோக் சக்கரவர்த்தி ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களம் காணுகிறார். அவர் தொகுதி முழுவதும் வீதி வீதியாக சென்று தலையணை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

அவருடன் அவரது மகனும் சினிமா தயாரிப்பாளருமான ஏ.சி.விஜய் மற்றும் ஏராளமான ஆதரவாளர்களும் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

வேட்பாளர் டாக்டர் ஏ.எஸ். அசோக் சக்கரவர்த்தி செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பெண்கள் மலர்களை தூவியும் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். பிரசாரத்தின் போது டாக்டர் ஏ.எஸ். அசோக் சக்கரவர்த்தி பேசுகையில், மீனவ மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடும் என்னை தலையணை சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். உங்களின் சேவகனாகிய நான் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து மக்கள் தொண்டாற்றுவேன் என்று கூறி ஆதரவு திரட்டினார்.