சட்டவிரோதமாக மீன்பிடித்த 19 இந்திய மீனவர்கள் கைது!

51 0

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 19 இந்திய மீனவர்கள் 2 மீன்பிடி படகுகளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (7) இரவு கடற்படை மற்றும்  கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினரால்  மேற்கொள்ளப்பட்ட  விசேட ரோந்து நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகளுடன் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

2024 ஆம் வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பில் 88 இந்திய மீனவர்கள் 12 இந்திய மீன்பிடி படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.