தேரர் சுட்டுக்கொலை : வாகனம், துப்பாக்கியை வழங்கியவர் கைது

54 0

கடந்த மாதம் கம்பஹா – மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்திலுள்ள விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பிக்குவை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் துப்பாக்கியை வழங்கிய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி அதிகாலையில் விகாரை ஒன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றது.

குறித்த சம்பவத்தில் விகாரையில் இருந்த 45 வயதான கலப்பலுவாவே தம்மரதன தேரர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.