உணவு கையாள்பவர்களுக்கான நெருப்புக் காய்ச்சல் தடுப்பு மருந்து

88 0

காத்தான்குடியில் உணவு கையாள்பவர்களுக்கான நெருப்புக் காய்ச்சல் தடுப்பு மருந்து ஏற்றும் நடவடிக்கை  செவ்வாய்க்கிழமை  (06) இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். சுகுணனின் ஆலோசனைக்கும் அறிவுறுத்தலுக்கமைய, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். நசிர்தீனின் வழிகாட்டலில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் பசீர், பொதுச் சுகாதார பரிசோதகர் றஹ்மத்துல்லாஹ் ஆகியோரால் புதிய காத்தான்குடி பத்ரியா ஜூம்மா பள்ளி வாயல் மண்டபத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது காத்தான்குடியிலுள்ள சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் உணவு கையாள்பவர்கள்  150 பேருக்கும் நெருப்புக் காய்ச்சல் தடுப்பு மருந்து ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.